Tamil Christian Gospel Page
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

உங்கள் வருகைக்கு நன்றி.உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்
Welcome, Today is:

எச்சரிக்கையாயிருங்கள்!


உங்கள் செய்கைகளின் பலனை இழந்து போகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவன் எவனும் தேவனை உடையவனல்ல கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

மேலும்...

 
கடைசிக் காலம் அண்மித்து விட்டது!

பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள். (மத்தேயு 24:3 )

1).
காதலர் தினம்: கழுதைகளுக்கு திருமணம்

காதலர் தினமான இன்று இந்து முன்னணி அமைப்பினர் நாய்களூக்கும் கழுதைகளூக்கும் கல்யாணம் நடத்தி வைத்தனர்.

 காலை ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் இரண்டு கழுதைகளுக்கு மாலை மாற்றி காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

நகர் தலைவர் மாரியப்பன், நகர் அமைப்பாளர் சப்பானி,ஆர்.எஸ்.எஸ்., நகர் அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

14, பிப்ரவரி 2010 www.nakkheeran.in

——————————

2).
தவளைக்கும், சிறுமிக்கும் திருமணம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும், சிறுமிக்கும் திருமணம் நடந்தது.
ஊர் நலனுக்காக கிராமத்தினர் கூடி இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தனர். அங்குள்ள குளத்தில் இருந்து ஒரு தவளையைப் பிடித்து வந்து சீர்வரிசை தட்டுகளுடன் மாப்பிள்ளை, மணமகள் ஊர்வலத்துடன் சிறுமிக்குத் தாலிகட்டி முகூர்த்தம் நடந்தது.

18.01.2009 www.nakkheeran.in

——————————

3).
நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெருவித்துள்ளார். கந்தானை வித்தியாலோக மகாவித்தியாலையத்தில் கல்வி பயிலும் இந்த சிங்கள மாணவர் கடந்த 25 ஆம் திகதி முதல் தான் பெண் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் யுத்தம் தொடர்பாக தமிழில் பேசி வருவதாக பாடசாலையின் அதிபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இத தொடர்பாக கருத்துத் தெரிவித்த காவற்துறையினர் இந்தச் சிறுவனின் பெற்றோர் சிங்களவர் எனவும், இவர்கள் கந்தானை கபல்லகஸ் சந்திப் பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 13 வயதான லக்ஸ்மன், அரவிந்த என்ற இந்தச் சிறுவனுக்கு சகோதரர் ஒருவர் உள்ளார் என்றும்; குறித்த சிறுவன் தான் ஒரு பெண்பிள்ளை எனவும் பெண்கள் அணியும் பாடசாலை உடையை அணிய அதிபரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது தனது பெயர் சிறீராமச்சந்திரன், ராஜி எனவும்; தகப்பனின் பெயர் ராமச்சந்திரன், ரமேஸ்குமார் எனவும்;தாயின் பெயர் ராமச்சந்திரன், ராசான் எனவும் இந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த 12 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்டதாக இவர் கூறியுள்ளார் இதே வேளை தற்பொழுது முழுமையாக சிங்கள மொழியை மறந்து தமிழிலேயே உரையாடுவதாகவும் தனது தற்போதைய சகோதரனைத் தெரியாது எனவும் இவர் கூறி வருகிறார்.
இதற்கிடையில் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவல் நிலையத்தின் சிறுவர் நலப்பிரிவின் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சிறுவன் முற்பிறவியில் யாழ்ப்பாணம் சிறீபத்ததிரகாளி அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தை தன்னையும் தாய், மற்றும் சகோதரனை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில் தாய் தம்மை அழைத்துக் கொண்டு நீர்கொழும்பு பிரதேசத்தில் சென்று குடியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது சகோதரர் ரமேஸ்குமார் என்பவர் றைகம் என்ற நிறுவனத்தின் பணியாளராக கடமை ஆற்றியதாகவும், ஒரு வருடத்தின் பின் தாயார் வெளிநாடு சென்றவுடன் சகோதரர் தன்னை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போது சனிக்கிழமை தினம் ஒன்றில் வீடுகள் நெரிசலாக உள்ள பிரதேசத்தில் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது தான் உயிர் இழந்ததாகவும் இந்தச் சிறுவன் தெரிவிப்பதாக காவற்துறையின் சிறுவர் நல அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை காளி கோவிலுக்கு நேத்திக்கடனைச் செலுத்த தனது தாயார் வரும் வரை தான் காத்திருப்பதாகவும் தனது சகோதரர் தான் விளையாட பந்து கொண்டு வருவார் எனத் தெரிவித்து வருவதாகவும் இந்த மாணவன் தெரிவிக்கும் நிலையில் தற்பொழுது இவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.